அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாட்டு மக்கள் அமெரிக்க வருவதற்கான தடையின் மீதான தடையை அமெரிக்க உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
ஈரான், லிபியா,சிரியா,ஏமன், சோமாலியா மற்றும் சாட் ஆகிய நாட்டு மக்கள் அமெரிக்கா வருவதற்கான தடையை டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்தார். இத்தடைக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்கள் விதித்திருந்த தடையினையே உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.