1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை

1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தனது  டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அன்று தாம் அந்த தாக்குதல்களை முறியடித்ததாகவும், அதேபோல் ரஷ்யாவின் தாக்குதல்களையும் முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles