அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறுவர் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 18 வயதான உயர் பள்ளி மாணவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறையினரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.