இலங்கை மக்களுக்கு தமிழக மக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் முதற்கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று(22/05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது.
தமிழக மக்களால் 40,000 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் பெருமளவு மருந்துப் பொருட்கள் போன்றவற்றை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
இதில் முதற்கட்டமாக, ஏறக்குறைய 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பின்வரும் நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடையும்.
🔵 அரிசி – 9,000 மெ.தொன்
🔵 பால்மா – 50 மெ.தொன்
🔵 மருந்துப் பொருட்கள் – 25 மெ.தொன்
மேற்படி பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பார்.