வரும் ஞாயிறு (07/10) தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25cm இற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.