60 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி

இலங்கையில் முப்பது வயதிற்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக கொழும்பில் வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முழுவீச்சில் தொடர்ந்தும் இடம்பெறுமென குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவிலிருந்து பெருந்தொகையான சினோபா(f)ம் தடுப்பூசிகள் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles