இலங்கையின் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்,
இதன்பிரகாரம் தகுதி பெற்ற தபால் மூல வாக்காளர்கள், வரும் 24ம் திகதி (24/07) காலை 08:30 இலிருந்து மாலை 04:00 மணிவரையும், 25ம் திகதி (25/07) காலை 08:30 இலிருந்து 02:00 வரையும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
ஏற்கனவே தபால் மூல வாக்களிப்பு கடந்த 13,14,15,16 மற்றும் 17ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.