இலங்கை பாராளுமன்றம் நாளை 02/03/2020 கலைக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியுட்டுள்ளது.
“வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் கூடிய புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறான அரசு அமையும் பட்சத்திலேயே அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டினைப் பாதுகாக்க முடியும்.
பிரதமரும், ஜனாதிபதியும் ஒரே கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படாவிடின், நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியாது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.