பொருளாதார நெருக்கடி 2029 வரை தொடரும் – பந்துல

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வரும் 2029ம் ஆண்டுவரை தொடரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

“இது பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் நிலைமை கைமீறிச் சென்றுள்ளதால், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறத் தீர்மானித்துள்ளது” என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் போராட்டங்களின் ஊடாக தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடி 2029வரை நீடிக்கும். எனவே மக்கள் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறந்த பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த பந்துல குணவர்த்தன, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கானும் நிலைமை ஏன் கைமீறிப்போனது என்பதற்கு தெளிவான விளக்கத்தை வழங்காமல், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு நழுவியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles