சீனாவிலிருந்து இலங்கைக்கு டீசல்

இலங்கை சீனாவிடமிருந்து டீசலை எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இம்மாதம் இறுதியில் ஒரு கப்பல் டீசல் இலங்கையை வந்தடையும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்திய கடன் உதவியில் தேவையான எரிபொருட்களை இலங்கை கொள்வனவு செய்யகூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles