சித்தாலேப குழுமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் புகழ் பெற்ற ஆயுர்வேத மருந்துப் பொருட்களை தயாரிக்கும் சித்தாலேப நிறுவனத்தின் தலைவர் திரு.விக்டர் ஹெட்டிகொட இன்று (02/04) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 84 ஆகும்.

1971ம் ஆண்டு தனது அயராத முயற்சியால் உறவினர் ஒருவர் வழங்கிய ரூபாய் 2,500 பணத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆயுர்வேத துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து, இன்று 3,500 தொழிலாளர்களுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான நிறுவனமாக சித்தாலேப நிறுவனம் வளர்ந்துள்ளது.

பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளை வென்ற வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட, 1990 ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவால் ‘தேசபந்து’ (முதலாம் நிலை) பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.

திரு விக்டர் ஹெட்டிகொட 2005ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles