பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஆவார்.

சிறந்த அரசியல் அனுபவம் உள்ள ஷெபாஸ் ஷெரீஃப், மூன்று முறை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் மீது ஹவாலா வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சில காலம் சிறைவாசமும் அனுபவித்துள்ள ஷெபாஸ் ஷெரீஃப், சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest articles

Similar articles