இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது – ரணில்

நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேதுமில்லை. போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவினர்களுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்த பிரதமர், போரின்போது இறந்தவர்கள் அனைவருமே இலங்கையர்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles