வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று(15/05) பொத்துவிலில் ஆரம்பமானது.
பொத்துவில் பேரணியானது வரும் 18ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலைச் சென்றடையும்.
15/05 : பொத்துவில் – கல்லடிப் பாலம்
16/05 : கல்லடிப் பாலம் – திருகோணமலை சிவன்கோவிலடி
17/05 : திருகோணமலை சிவன்கோவிலடி – முல்லைத்தீவு
18/05 : முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்