போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தளபதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

Ratko Mladić1995ல் பொஸ்னியாவின் சிரேபிராணிகா என்ற இடத்தில் 7000ற்கும் மேற்பட்ட பொஸ்னியாக் இன ஆண்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பொஸ்னியா ராணுவத்தளபதி ராட்கோ மிலாடிக்கிற்கு (வயது 74) இன்று (22-11-2017) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இவர் போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய யுத்தக்குற்றமாக இது கருதப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles