பிரதமரின் புதிய அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள், சுயாதீனமாக இயங்கிய பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தனித்து இயங்கும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரா என ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
🌑 டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு
🌑 விஜயதாச ராஜபக்ச – நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு
🌑 நிமால் சிறிபால டி சில்வா – துறைமுகம், கப்பல் துறை மற்றும் விமானத்துறை
🌑 சுசில் பிரேமஜயந்த – கல்வி
🌑 ஹெகலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
🌑 ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில்
🌑 நளின் பெர்னாண்டோ – வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு
🌑 மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
🌑 ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சு