றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி

றம்புக்கணையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக் கைது செய்ய கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாட்கள் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையை அடுத்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட காவல்துறையினர் ஆகியோரை கைது செய்யுமாறு கேகாலை நீதிமன்ற நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர் உட்பட 29 பேர் காயமடைந்திருந்தனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles