ரம்புக்கணையில் பதற்றம். ஒருவர் உயிரிழப்பு, 12பேர் காயம்

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர். கோபமடைந்த மக்கள் ரம்புக்கணை காவல் நிலையத்தை சுற்றிவளைத்து கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்ததாவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் செய்த பின்பே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். தற்சமயம் ரம்புக்கணை பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Latest articles

Similar articles