இலங்கை ​விமான நிறுவன​ங்களில் ​​​​இடம்பெற்ற ​ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

​​ஸ்ரீலங்கன் மற்றும் ​​​ ​மிஹின் லங்கா ​​​விமான நிறுவன​ங்களில் ​​​​இடம்பெற்றதாக கூறப்படும் ​​ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ​​ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்த​லில்​ ஜனாதிபதி மைத்திரிபால ​சிறிசேனா ​ஒப்பமிட்டுள்ளார்.

​ஐவர் கொண்ட ​ ​ஜனாதிபதி ஆணைக்குழு ​ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், ​ஸ்ரீலங்கன் விமான சேவையின் உணவு விநியோக நிறுவனம் மற்றும் ​மிஹின் லங்கா நிறுவனங்களில் ஜனவரி 1, 2006 முதல் ஜனவரி 31, 2018 வரை ​இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும்.

Latest articles

Similar articles