ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒப்பமிட்டுள்ளார்.
ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், ஸ்ரீலங்கன் விமான சேவையின் உணவு விநியோக நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் ஜனவரி 1, 2006 முதல் ஜனவரி 31, 2018 வரை இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும்.