20 வீதமான தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடும்

20 சதவீதமான தனியார் பேருந்துகளே இன்று(06/06) சேவையில் ஈடுபடுமென தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் டீசல் தட்டுப்பாட்டினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இக்கட்டான நிலையிலும், இதுநாள்வரையில் 50 சதவீதமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அரசின் வரி அதிகரிப்பால் பேருந்து உதிரிப்பாகங்களின் விலை மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய கெமுனு விஜேரத்ன, இன்று பாடசாலைகள் ஆரம்பமாவதால், மாணவர்களின் நன்மை கருதி, பல பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles