பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (16/11) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றி பெற்றிருந்தார். இதனால் மக்களின் தீர்ப்பை ஏற்று அரச செயற்பாட்டினை சுமூகமாக கொண்டு செல்லுமுகமாக, ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் வரும் மூன்று மாதங்களுக்கு 15 அமைச்சர்களுடன் காபந்து அரசு புதிதாக தெரிவு செய்யப்படும் பிரதமருடன் அமைய வாய்ப்புள்ளது. மகிந்த ராஜபக்சவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படினும், கோத்தபாய ராஜபக்ச யாரை பிரதமராக நியமிக்கப்போகிறார் என்பது இன்று அல்லது நாளை தெரியவரும்.

மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles