கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம்

மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, இராணுவ வாகனங்களிற்கும் தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால் அரசாங்கம் கொழும்பு மாவட்டதின் பல பகுதிகளில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை காவல்துறை பிரிவுகளிலேயே மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles