கூட்டு எதிர்கட்சியினால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 126 பேர் வாக்களித்திருந்ததுடன் 76 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 26 பேர் அவையில் சமூகமளித்திருக்கவில்லை.