இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோய்த் தொற்று உள்ள ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.
டுபாய் அபுதாபியிலிருந்து வந்தவர் என்று கருதப்படும் ஒருவருக்கே குரங்கம்மை நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 மதிக்கத்தக்க இளைஞர் கடந்த முதலாம் திகதி (01/11) குரங்கம்மை வைரசுடன் இலங்கை வந்துள்ளார். இவர் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.