செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘இன்ஸைட்’ ரோபோ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
பூமியிலிருந்து 458 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்தை, சுமார் ஏழு மாதங்களில் இந்த விண்கலம் சென்றடைந்துள்ளது.
தரையிறங்கிய உடனேயே புகைப்படங்களை எடுத்து அனுப்ப ஆரம்பித்துள்ளது இந்த ‘இன்ஸைட்’ ரோபோ விண்கலம். ஒரு புகைப்படம் பூமியை வந்துசேர எட்டு நிமிடங்கள் தேவைப்படுவதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.