கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாசா தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி சின்னம்) கூட்டணியில் போட்டியிடும் தமிழ் பிரதிநிதிகளான மனோ கனேசன் மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோர் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
கொழும்பில் தமிழரின் மத்தியில் அதிகம் பிரபலமான மனோ கனேசன் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இளம் வேட்பாளரான ஜனகனும், மனோ கனேசனுடன் சேர்ந்து போட்டியிடுவதால், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் பெரும்பாலும் அவரையும் வெல்ல வைப்பதற்கான சந்தர்ப்பமுள்ளது.