கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
— Maithripala Sirisena (@MaithripalaS) August 7, 2018
இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து துயருற்றேன். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 7, 2018
கலைஞர் அவர்களின் மறைவால் துயருறும் மில்லியன்கணக்கானோரோடு நானும் இணைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 7, 2018