கொழும்பு தெற்கு வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலையின் விடுதி ஒன்று கொரோனா நோயாளி ஒருவர் இனம்காணப்பட்டதால் மூடப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த விடுதியிலிருந்த ஏனைய நோயாளிகள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும், ஊழியர்கள் மகரகமையில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.