2005ம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோச பரராஜசிங்கம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முதலாம், மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேர் சேர்ந்தே இந்தப் படுகொலையை செய்தோம் என முதலாம், மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு யார் உத்தவிட்டார்கள் என்று பிள்ளையான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவாரா?? கொலை செய்ய உத்தரவிட்டவர்களை நீதிமன்றம் கண்டு பிடிக்குமா?? போன்றவற்றை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2005ல் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை இடம்பெற்று சரியாக மூன்று வருடங்களில், மகிந்த ராஜபக்ச பிள்ளையானை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.