இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்

இத்தாலி ஜெனோவா நகரில் மொரண்டி பாலம் நேற்று (14/08) இடிந்து விழுந்தத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

நான்கு தொடக்கம் 12 பேர்வரையில் காணாமல் போயுள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1960ல் கட்டப்பட்ட இந்த மொரண்டி பாலம் இடிந்து விழுந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles