கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள்

அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாத வண்னம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை இளைஞர்கள் மறித்துள்ளனர்.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வாகனங்களைக் கொண்டு பிரதான நுழைவாயிலை மறித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles