65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்கும் இந்தியா

இந்தியா 65,000 மெற்றிக்தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்குகின்றது.

இந்தியாவிலிருந்து யூரியாவை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டிருப்பினும், இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து, இந்தியா யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்புகின்றது.

ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் டொலர்கள் உர இறக்குமதிக்காக தேவைப்படுவதால், கோத்தபாய அரசாங்கம் இரசாயன உரங்களின் பாவனையை கடந்த வருடம் தடை செய்திருந்தது. அதற்குப் பதிலாக சேதனப் பசளைகளின் பாவனையை அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles