முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உட்பட 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஹிருணிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவிருந்தது.
கொழும்பு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பு இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம், காவல்துறையினரின் ஏற்படுத்திய தடையினால் சுதந்திர சதுக்கம் அருகே ஆரம்பமானது. இருப்பினும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை முற்றாக தடுத்தனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறை நிலையத்திற்கு முன்னால் காவல்துறையினரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே ஹிருணிகா உட்பட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.