ஹெய்டி பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,419 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கானாமல் போயுள்ளாதாக அஞ்சப்படுகின்றபோதிலும், சரியான எண்ணிக்கை இன்னும் தெரியாமலேயே உள்ளது.

7.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த பாரிய பூகம்பத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை தேடும் பணிகள் தொடந்த வண்ணம் உள்ளன.

இதேவேளை வரும் திங்கட்கிழமை பருவகால புயல் ஒன்று ஹெய்ட்டியின் பூகம்பம் இடம்பெற்ற பகுதியைக் கடக்கவுள்ளது. இந்த புயல் ஏற்படுத்தும் வெள்ளத்தால், மீட்புப் பணிகள் பாரிய அளவில் பாதிக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles