கவுதமாலா நாட்டிலுள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200 பேர் வரையில் காணாமல் போகியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதிலிருந்து 10Km தொலைவிற்கு 700’c வெப்பம் மிகுந்த எரிமலை குழம்பு வெளியேறியிருந்தது.