கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த அறிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜையாக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை அண்மையில் ரத்து செய்திருந்தார்.
இவர் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கின்றனவா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு செயலாளரான செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச, அந்நேரம் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.