அரசியலமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைக் கண்டித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தரணிகள், நாட்டுப்பற்றாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விசேட மனுக்களை விசாரிக்க பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.