30 மில்லியன் முகநூல் வாடிக்கையாளர்களின் தகவல் ஹேக்கர்களினால் திருடப்பட்டுள்ளதாக என முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தானியங்கி மென்பொருள் மூலம் ஹேக்கர்கள் 50 மில்லியன் வாடிக்கையாளர்களின் கணக்குகளை தாக்கியபோதும் 30 மில்லியன் கணக்குகளே பாதிக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
யார் ஹேக்கர்கள், எங்கிருந்து தாக்கினார்கள் போன்ற தகவலை முகநூல் நிறுவனம் வெளியிடாதபோதும், வரும் நாட்களில் பாதிக்கப்பட்டவர்களை தாம் தொடர்புகொள்வோம் என அறிவித்துள்ளது.