டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியால், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுஸ்தாபனத்தின் (LIOC) நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாயினாலும்,  ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

டீசலின் புதிய விலை 214/=
பெற்றோலின் புதிய விலை 254/=

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்து இடம்பெறுவதால் உலகளாவியரீதியில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles