இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் நேற்று (17/12) நடந்த மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் இந்திய அணி எட்டு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகபட்டணம் மைதானத்தில் நடந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 215 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் உப்புல் தரங்க 95 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 33வது ஓவரிலேயே இரண்டு விக்கட்டுக்களை மட்டும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியது. இதில் தவான் 100 ஓட்டங்களையும், சந்தோஷ் ஐயர் 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
(படம் : ESPN Cricinfo)
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2:1 என்ற விகிதத்தில் வென்றுள்ளது. ஆட்டநாயகனாக 3 விக்கட்டுக்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் K.யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர் நாயகனாக தவான் தெரிவு செய்யப்பட்டார்.