மத்திய பாரிஸ் நகரின் வீதிகளில் சுற்றித் திரிந்த புலி ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
200Kg நிறையுடைய இப்புலியானது சர்க்கஸ் ஒன்றிலிருந்து தப்பி, பாரிஸ் நகரின் வீதிகளில் சுற்றித் திரிந்துள்ளது. உடனடியாக வீதிப்போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
சில நிமிடங்களின் பின்னர் அப்புலி சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சர்க்கஸ் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.