சீன அரசாங்கம் இலங்கைக்கு 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான 65 வருட இராஜதந்திர உறவுகளைப் பேணிவரும் சீனா, வர்த்தகரீதியாக இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மேற்கொண்டு 70 வருடங்களையும் நிறைவு செய்கிறது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டினை அடுத்து, இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவசர உதவியாக 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது.