இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போர் இடம்பெறும் உக்ரேனுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார்.
உக்ரேன் தலைநகர் கிய்வில் பிரதமர் ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பையும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சில இடங்களையும் பார்வையிட்டார்.
தனது விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்ஸன், இந்த விஜயம் உக்ரேனிய மக்களுக்கான எமது ஆதரவைக் காட்டுவதாக அமைகின்றது. மேலும் உக்ரேனிய பிரதமர் ஸெலென்ஸ்கி ஒரு சிங்கத்தைப் போல துணிவு உடையவர் எனவும் பாராட்டியுள்ளார்.