புதினம்
National news
நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்
புதினம் -
இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்துள்ளன. மேற்படி அமைப்புகள் மக்களிடம் விடுத்த வேண்டுகோள்களாவன,🌑 வீடுகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் கறுப்புக் கொடியை பறக்க விடுதல்🌑 கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறல்🌑 கறுப்பு உடையணிந்து, கறுப்புக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடல்🌑 ஊழல்...
National news
கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO
புதினம் -
கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான மக்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது. பெரும்பாலான தென் ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்ட உயிரிழப்புகளின் விபரங்கள், உத்தியோகபூர்வ உயிரிழப்புகளைக் காட்டிலும் அதிகமானதாகக் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக...
National news
ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய பிரதி சபாநாயகராகத் தெரிவு
புதினம் -
இன்று(05/05) பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அணி சார்பாக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் சியம்பலப்பிட்டியும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டதால், வாக்கெடுப்பின் மூலம் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும்படி சபாநாயகர் உத்தரவு வழங்கினார். இதன்படி ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய 148...
National news
தனியார் பேருந்து சேவைகள் பகிஷ்கரிப்பு
புதினம் -
இன்று(05/05) நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவைகள் பணிப் பகிஷ்கரிப்பு ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நாளை(06/05) நாடுதழுவியரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மீண்டும் டீசலுக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முழுமையாக சேவைகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Local news
பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
புதினம் -
பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களுடனான சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்ட பலாலி சர்வதேச...
Local news
படகு மூலம் இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்படைந்துள்ள மக்கள் இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் வேலணை கடற்பகுதியிலிருந்து இந்தியா செல்ல முற்பட்ட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒரு குழந்தையும் உள்ளடங்கும். கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவல்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு கடற்பரப்பின்...
National news
இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு
புதினம் -
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், பிரதமர் உட்பட முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை...
Local news
சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்
புதினம் -
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். மகிந்தவின் ஆட்சி முடியும் தருவாயில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகுவதாக, சுமந்திரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்திற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே செந்தில் தொண்டமான் சவால் விடுத்துள்ளதுடன், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார். 👉 நீங்கள்...
National news
அமெரிக்காவின் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
புதினம் -
ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, கடந்த முதலாம் திகதி(01/05) அமெரிக்க வாழ் இலங்கையர்களினால் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்றில், அமெரிக்காவில் இலங்கையர்கள் நாடு தழுவியரீதியில் மேற்கொள்ளும் பாரிய அரச எதிர்ப்புப் போராட்டம் இதுவாகும். 'இலங்கையைப் பாதுகாப்போம்', 'பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும்', 'குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்', 'ஊழல்...
National news
ஹரின் பெர்னான்டோவின் சண்டித்தனம்
புதினம் -
ராஜபக்ச சண்டியர்களை அகற்றி நாட்டைக் காப்பாற்ற போராடுவதாகக் சொல்லும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் சண்டியர்கள் இருப்பதையே நேற்றைய சம்பவம் தெளிவாகக் காட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ நேற்று(01/05) இடம்பெற்ற மேதின கூட்டத்தில் சக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுடன் தகராறில் ஈடுபட்டிருந்தார். வாய்த்தகராறில் ஈடுபட்ட ஹரின் பெர்னான்டோவை...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
