படகு மூலம் இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்படைந்துள்ள மக்கள் இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்து வருகிறார்கள்.

அந்த வகையில் வேலணை கடற்பகுதியிலிருந்து இந்தியா செல்ல முற்பட்ட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒரு குழந்தையும் உள்ளடங்கும். கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவல்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு கடற்பரப்பின் பல பகுதிகளிலிருந்தும் படகு மூலம் இந்தியா செல்ல மக்கள் முயற்சிக்கிறார்கள். சட்டரீதியற்ற இந்த பயணத்திற்கு, சராசரியாக ஒரு படகிற்கு ரூபாய் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை பெறப்படுகிறது என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest articles

Similar articles