புதினம்

அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது – கர்தினல் மல்கல் ரஞ்சித்

இலங்கை அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது என கர்தினல் மல்கல் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் ஆட்சிமுறை சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப இடம்பெறுகின்றதா என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை (UNHRC) உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை ஆட்சியாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதை...

303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து

வியட்நாம் கொடி தாங்கிய கப்பல் (Lady R3) ஒன்று விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல் மற்றும் கப்பல்கள் கண்பாணிப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை ஜப்பான் கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாகவும், காப்பாற்றப்பட்டவர்கள் இன்று(08/11) வியட்நாமின் வுங் டோவ்...

நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், ராஜபக்சகளுக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மதவாச்சி பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே சஜித் பிரேமதாசா மேற்படி கருத்தைத் தெரிவித்தார். நாம் ஆட்சியமைத்தால் அரசியல் தலையீடற்ற சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ராஜபக்ச சகோதரர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும்...

ஹம்பாந்தோட்டை கடலில் 300kg ஹெரோயின் மீட்பு

ஹம்பாந்தோட்டைக்கு அப்பாற்பட்ட கடலில் இலங்கை கடற்படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 300kg ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மீன்பிடிப் படகுகள் மற்றும் டிங்கி வகைப் படகுகள் என்பவற்றிலிருந்தே இருந்தே மேற்படி போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் வியாபரிகளினால் ஆழ்கடலில் வைத்து கைமாறப்பட்டதாக...

நாளை பூரண சந்திர கிரகணம்

நாளை (08/11) பூரண சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. இலங்கையர்கள் சந்திரகிரகணத்தின் இறுதிப்பகுதியை காணக்கூடியதாக இருக்குமென கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் ஆய்வுப் பிரிவு தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி சந்திர கிரகணம் நேர விபரங்கள் பின்வருமாறு,ஆரம்ப நேரம் : பகல் 1.30முழுமை அடையும் நேரம் : மாலை 4.29முடிவடையும் நேரம் : மாலை...

எகிப்தில் ரணில் – ஐ.நா செயலாளர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எகிப்து கெய்ரோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி முதற்கட்டமாக ஐ.நா செயலாளரைச் சந்தித்து தேசிய சுற்றுச்சூழல் கொள்ளைத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதா இறுதியில்

2021ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நவம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம், விடைத்தாள்கள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

4 அமைச்சுக்கள் ஜனாதிபதியின் பொறுப்பில்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் கலந்தாலோசித்த பின்னர், பின்வரும் அமைச்சுக்களை தனது பொறுப்பில் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளார் என அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தொழில்நுட்ப அமைச்சு மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு

ஆஸ்திரேலியாவில் இலங்கை துடுப்பாட்ட வீரர் கைது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர் தனுஷ்க குணதிலக மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான தனுஷ்க குணதிலக சிட்னி நகரில் 29வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தமை உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்தார்....

தமிழகத்தில் மேலும் 10 இலங்கையர்கள் தஞ்சம்

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் மூன்று மாதக் குழந்தை ஒன்றும் உள்ளடங்கும். யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 10 பேர் நேற்று (05/11) தனுஷ்கோடி பகுதியில் கரைசேந்துள்ளனர். கரையோர காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர், இவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக,...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img