ஹம்பாந்தோட்டைக்கு அப்பாற்பட்ட கடலில் இலங்கை கடற்படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 300kg ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீன்பிடிப் படகுகள் மற்றும் டிங்கி வகைப் படகுகள் என்பவற்றிலிருந்தே இருந்தே மேற்படி போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் வியாபரிகளினால் ஆழ்கடலில் வைத்து கைமாறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 300kg போதைப் பொருட்களை கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்னரே இலங்கை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
Update : மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த போதைப் பொருளின் பெறுமதி 600 கோடிக்கும் ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.