நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது

பிந்திய இணைப்பு : ஜூலை 10ம் திகதிவரை நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வலய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள நகர்ப்புற பாடசாலைகளை இன்றிலிருந்து(27) ஜூலை முதலாம் திகதிவரை மூடுவதாக கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறையினால் ஆசிரியர்கள், மாணவர்களின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாகவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles