1995ல் பொஸ்னியாவின் சிரேபிராணிகா என்ற இடத்தில் 7000ற்கும் மேற்பட்ட பொஸ்னியாக் இன ஆண்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பொஸ்னியா ராணுவத்தளபதி ராட்கோ மிலாடிக்கிற்கு (வயது 74) இன்று (22-11-2017) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இவர் போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய யுத்தக்குற்றமாக இது கருதப்படுகிறது.