48 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது தந்தையின் நினைவிடம் அமைப்பதற்காக, பொதுமக்களின் நிதியில் 48 மில்லியன் ரூபாவை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியதற்காகவே கோத்தபாய உள்ளிட்டோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.